பொங்கல் விளையாட்டு போட்டியில் கோஷ்டி மோதல்.! 6 பேருக்கு அரிவாள் வெட்டு.! - Seithipunal
Seithipunal


ராமநாதபுரம் மாவட்டத்தில் பொங்கல் விளையாட்டு போட்டியில் ஏற்பட்ட தகராறில் 6 பேர் அரிவாளால் வெட்டப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி அருகில் உள்ள புதுக்குடி கிராமத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கபடி போட்டி நடைபெற்றது. அப்போது விளையாடும் போது தர்மராஜ் என்பவருக்கும், ராஜேஷ் என்பவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இந்த வாக்குவாதம் கைகலப்பாக மாறி ஒருவரை ஒருவர் தாக்கியுள்ளனர்.

அதன்பிறகு, தர்மராஜ் மற்றும் அவரது உறவினர்கள் பலத்த ஆயுதங்கள் மற்றும் அரிவாளால் ராஜேஷ் தரப்பு சேர்ந்தவர்களை தாக்கியுள்ளனர். இதில், சகாதேவன், சக்திவேல், காளிமுத்து உள்ளிட்ட 6 பேருக்கு அரிவாள் வெட்டு விழுந்துள்ளது.

இதனையடுத்து, ரத்த வெள்ளத்தில் கிடந்தவர்களை மேல் சிகிச்சைக்காக ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இது குறித்து தொண்டி காவல்துறையினர் தர்மராஜ் தரப்பினர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Pudhukudi kabaddi match gang war


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->