பெண்ணை மிரட்டி பணம் நகை பறித்த காமுகன்.. புதுக்கோட்டையில் பொள்ளாச்சி, நாகர்கோவில் காசி கும்பல்..!!
Pudhukottai culprit arrested by police cheated girl
தமிழகத்தின் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அறந்தாங்கி கோ.பாலசமுத்திரம் பகுதியை சார்ந்தவர் முகமது அப்சல் (வயது 23). இவருக்கு திருமணம் முடியாத நிலையில், கேட்டரிங் படிப்பு பயின்று பணிகளுக்கு செல்லாமல் ஊர் சுற்றுவதை வழக்கமாக வைத்துள்ளார். மேலும், மாட்டுவண்டி பந்தயத்தில் கலந்து வந்துள்ளார். இந்நிலையில், முகநூலில் பெண்களிடம் அறிமுகம் ஏற்படுத்திக்கொண்டு, இலாவக பேசி அவர்களின் அலைபேசி எண்ணை வாங்கியுள்ளார்.
பின்னர் வாட்சப் செயலி மூலமாக கவர்ந்திருக்கும் வகையில் பேசி, இவனது வலையில் விழும் பெண்களின் இல்லத்திற்கு சென்று நகை மற்றும் பணத்தை அபகரித்து சொகுசாக வாழ்க்கையை நடத்தி வந்துள்ளான். சென்னையில் திருமணம் முடியாத அரசு பெண் ஊழியர், காரைக்குடி மற்றும் மதுரை பகுதியை சார்ந்த பல பெண்களும் இவனது வலையில் விழுந்துள்ளனர்.
இதனைப்போன்று கடந்த மூன்று வருடங்களுக்கு முன்னதாக அறந்தாங்கி பகுதியை சார்ந்த பெண்ணொருவருடன் பழக்கம் ஏற்படவே, அந்த பெண்ணிற்கு திருமணம் முடிந்து இரண்டு குழந்தைகள் மற்றும் கணவர் இருக்கிறார். பெண்ணின் கணவர் வெளிநாட்டில் பணியாற்றி வரும் நிலையில், பெண்ணுடன் தொடர்பை ஏற்படுத்திய காமுகன் பெண்ணிடம் இருந்து நகை மற்றும் பணத்தை வாங்கியுள்ளான்.
பெண்ணின் கணவர் ஊர்திரும்ப நேரம் வந்ததை அடுத்து, தான் கொடுத்த நகை மற்றும் பணத்தை திருப்பி கேட்கவே, இதுபோன்று தொடர்ந்து வற்புறுத்தி வந்தால் கணவரிடம் அவதூறாக உன்னை பற்றி கூறுவேன் என்று எச்சரித்துள்ளான். இருப்பினும், கணவர் சம்பாரித்த பணம் மற்றும் நகையை மீண்டும் கேட்ட பெண்மணிக்கும், காமுகன் முகமத்திற்கும் தகராறு வெடித்துள்ளது.
இதனால் பெண் பேசிய உரையாடல் பதிவை கணவருக்கு அனுப்பவே, கணவன் - மனைவிக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து இது குறித்து பெண்மணி அங்குள்ள அறந்தாங்கி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், காமுகன் முகமத்திடம் மேற்கொண்ட விசாரணையில், இதனைப்போன்று இரண்டு பெண்கள் பணம் மற்றும் நகையை பறிகொடுத்தது தெரியவந்துள்ளது.
முகமது தற்போது சிறையில் கம்பிஎண்ணிக்கொண்டு இருக்கும் நிலையில், அறிமுகம் இல்லாத நபர்களிடம் தேவையில்லாத பழக்கம் மற்றும் அலைபேசி எண்களை பெண்கள் கொடுத்து வாழ்க்கையை இழக்க வேண்டாம் என்று காவல் துறையினர் எச்சரித்துள்ளனர். முகம்மதின் நண்பர்கள் மற்றும் அவரது குழு குறித்த விசாரணையும் நடைபெற்று வருகிறது.
Tamil online news Today News in Tamil
English Summary
Pudhukottai culprit arrested by police cheated girl