இத குடிச்சிட்டு, கம்முனு படு., சிறுமியை சீரழித்த காமுகன்.! சின்னப்பிள்ளை வயிற்றில் சிசு.! - Seithipunal
Seithipunal


புதுக்கோட்டை மாவட்டத்தில் இருக்கும் பொன்னமராவதி அருகேயுள்ள கிராமத்தில் 17 வயதாகும் சிறுமி பெற்றோருடன் வசித்து வந்துள்ளார். இவர் அங்குள்ள அரசு பள்ளியில் 12 ஆம் வகுப்பு பயின்று வருகிறார். இவருக்கு கடந்த சில நாட்களாக வயிற்று வலியின் காரணமாக அவதியுற்று வந்துள்ளார். 

இதனைக்கண்ட பெற்றோர் சிறுமியை அங்குள்ள மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். சிறுமியை மருத்துவமனையில் பரிசோதனை செய்த மருத்துவர்கள் சிறுமி 7 மாத கர்ப்பமாக இருப்பதாக தெரிவித்துள்ளனர். 

இந்த விஷயத்தை அறிந்து அதிர்ச்சியான பெற்றோர்கள் சிறுமியிடம் விசாரணை மேற்கொண்டனர். இந்த விசாரணையின் போது, சிறுமியை இப்பகுதியை சார்ந்த ராஜ்குமார் என்ற காமுகன் 11 ஆம் வகுப்பு விடுமுறை நேரத்தில் குளிர்பானத்தில் மயக்க மருந்து கொடுத்து பாலியல் பலாத்காரம் செய்துள்ளது தெரியவந்துள்ளது. 

மேலும், இதனை கூறியே சிறுமியை பலமுறை காமுகன் பாலியல் பலாத்காரம் செய்து வந்துள்ளான். இதனை வெளியே கூறினால் கொலை செய்து விடுவேன் என்று மிரட்டலும் விடுத்திருந்துள்ளான்.    

இதனையடுத்து இந்த விஷயம் குறித்து மாணவியுடைய பெற்றோர்கள் கீரனூர் மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதனை பெற்ற காவல் துறையினர் போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து ராஜ்குமாரை கைது செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

pudhukottai child abused by men


கருத்துக் கணிப்பு

தமிழக மக்களவை தேர்தல் ரேஸில் முந்துவது எந்த கூட்டணி?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழக மக்களவை தேர்தல் ரேஸில் முந்துவது எந்த கூட்டணி?




Seithipunal
--> -->