நடுராத்திரியில் திடீரென அலறிய பெண்கள்! மர்ம நபரால் நேர்ந்த துயரம்!!  - Seithipunal
Seithipunal


திருப்பூர் மாவட்டத்திலுள்ள உடுமலை அருகே ஜோதிலக்ஷ்மி(60) என்பவர் அவருடைய மகன் மற்றும் மருமகளுடன் வசித்து வந்தார். இந்த நிலையில் நேற்று இரவு ஜோதிலக்ஷ்மி அவரது வீட்டிற்கு வெளியே தூங்கிக் கொண்டிருந்தபோது மர்ம நபர் ஒருவர் அவரது தலையில் பெரிய கல்லை போட்டுள்ளார். இதனால் அவர் துடிதுடித்து சம்பவ இடத்திலேயே இறந்துள்ளார்.

மேலும் வீட்டிற்குள் சென்ற அவர் ஜோதிலட்சுமி மருமகளையும், பக்கத்து வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த ஜெயலட்சுமி என்பவர் மீதும் கல்லை தூக்கி போட்டுள்ளார். பின்னர் இவர்களது அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம்பக்கத்தினர் மர்ம நபரை பிடிப்பதற்குள் அவர் அங்கிருந்து ஓட்டம் பிடித்து விட்டார்.

இதனை தொடர்ந்து வீட்டிற்கு வெளியே வந்து பார்த்தபோது ஜோதிலக்ஷ்மி இறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து ஜெயலட்சுமியின் உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

பின்னர் கலைவாணி, ஜெயலட்சுமி இருவரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவத்தில் சைக்கோ வாலிபருக்கு தொடர்பு இருக்கலாம் என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

psycho man killed women in thirupur district


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->