நிலத்தடி நீரை உறிஞ்சும் மது ஆலைகள்!! களத்தில் இறங்கிய இயக்கம்.,கைது செய்த போலீசார்!!
protest in pudhukottai
கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக 'கால்ஸ் டிஸ்டிலரிஸ்' மது தயாரிப்பு ஆலை ஒன்று இயக்கப்பட்டு வருகிறது. இந்த ஆலை புதுக்கோட்டை மாவட்டத்தில் கந்தர்வகோட்டை அருகே உள்ள கல்லாக்கோட்டை என்ற பகுதியில் இயங்கி வருகிறது.
மது ஆலைக்கு தேவையான தண்ணீரை எடுப்பதனால், நிலத்தடி நீர் குறையும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மேலும், பொதுமக்கள் பலர் இந்த ஆலையால் அப்பகுதியைச் சுற்றிலும் நிலத்தடி நீர்மட்டம் மிகவும் கடுமையாக பாதிக்கப்படுவதாககுற்றம்சாட்டி வருகின்றனர்.
இந்நிலையில், தமிழ் தேசிய இயக்கத்தின் சார்பில் 300க்கும் மேற்பட்டவர்கள் ஆலையை மூடக்கோரி முற்றுகை போராட்டம் நடத்தினர். அப்போது கல்லாக்கோட்டை பேருந்து நிறுத்தத்தில் இருந்து ஊர்வலமாக வந்தவர்களை காவல்துறையினர் தடுத்து நிறுத்தி கைது செய்தனர்.