மசாஜ் சென்டரில் நடக்கும் மஜாவான வேலைகள்..! சிக்கிய கேரளத்து கிளிகள்..!
prostitution on massage center
விடுதிகள் மற்றும் மசாஜ் சென்டர் நடத்தும் பெயரில் சிலர் பாலியல் தொழிலில் ஈடுபட்டு வருகிறார்கள். அந்தவகையில் இம்மாதிரியான இடங்களில் பாலியல் தொழிலில் ஈடுபட்டதாக கேரளாவை சேர்ந்த 14 பெண்கள் பெண்களை போலீசார் கைது செய்துள்ளனர்.
சர்வதேச சுற்றுலா தளமாக விளங்கும் கன்னியாகுமரியில், உள்ளூர் மற்றும் வெளிநாட்டிலிருந்து ஆயிரக்கணக்கானோர் சுற்றுலாப் பயணிகளாக வருகை புரிந்து வருகிறார்கள். இதன் காரணமாக கன்னியாகுமரியில் தங்குவதற்கான விடுதிகள் மற்றும் வெளிநாட்டவர்களுக்கு வசதியாக இருக்கும் வகையில் மசாஜ் சென்டர்கள் பல உள்ளன.
இந்த நிலையில் விடுதிகள் மற்றும் மசாஜ் சென்டரில் பாலியல் தொழில் நடைபெறுவதாக பொதுமக்களில் சிலர் காவல் கண்காணிப்பாளருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அவர்கள் அளித்த புகாரின் அடிப்படையில் குறிப்பிட்ட விடுதிகள் மற்றும் மசாஜ் சென்டர்களை போலீசார் அதிரடி சோதனையில் ஈடுபட்டார்கள்.
அப்போது நடைபெற்ற சோதனையில் கேரளாவை சேர்ந்த 14 பேர் கைது செய்யப்பட்டனர். மேலும், கைதுசெய்யப்பட்ட அந்த பெண்களிடம் செல்போன்கள், சொகுசுகார்கள் போன்றவற்றை பறிமுதல் செய்தனர். மேலும், இதுகுறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
English Summary
prostitution on massage center