புதுக்கோட்டையில் ரகசிய பாலியல் தொழில்.! ஸ்கெட்ச் போட்டு தூக்கியதில், வசமாக சிக்கிய 13 பேர்..!
prostitution in pudhukottai
புதுக்கோட்டை மாவட்டத்தில் இருக்கும் பல்வேறு இடங்களில் ரகசிய பாலியல் தொழில் நடைபெறுவதாக அந்த மாவட்ட கண்காணிப்பாளருக்கு தகவல் கிடைத்திருக்கிறது. இந்த தகவலின்படி பாலியல் தொழில் செய்பவர்களை கைது செய்ய தனிப்படை போலீசார் மறைமுகமாக கண்காணித்து வந்துள்ளனர்.
சந்தேகத்திற்கு உரிய அனைத்து இடங்களிலும் காவல்துறையினர் மறைமுகமாக கண்காணித்து வந்துள்ளனர். இதனை தொடர்ந்து திருக்கோகர்ணம் பகுதிக்கு உட்பட்ட அபிராமி நகர், பெரியார் நகர், ராஜகோபாலபுரம் மற்றும் காந்திநகர் என பல்வேறு இடங்களில் திடீரென சோதனை மேற்கொண்டனர்.
அப்போது அங்கே 7 இடைத்தரகர்கள் மற்றும் 5 பெண்களை காவல்துறையினர் கைது செய்தனர். இவர்கள் அனைவரும் தமிழகத்தைச் சேர்ந்த பாலியல் தொழிலாளிகள். இவர்கள் இந்த தொழிலுக்காக பயன்படுத்திய ஆட்டோ, பணம், கார் உள்ளிட்டவற்றை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.
தொடர்ந்து 13 பேரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு இருக்கின்றனர். இதுகுறித்து காவல்துறையினர், "ரகசிய தகவல் கிடைத்ததைத் தொடர்ந்து நாங்கள் கண்காணித்து வந்தோம். திடீரென சோதனை செய்து அவர்களை எதிர்பாராத நேரத்தில் கையும் களவுமாக பிடித்தோம்.
இதுபோல வேறு எங்காவது பாலியல் தொழில் நடப்பது தெரிய வந்தால் உடனடியாக காவல்துறைக்கு தகவல் கொடுங்கள்." என்று தெரிவித்திருக்கின்றனர்.
English Summary
prostitution in pudhukottai