காட்டேஜ் தேடி அலைந்த பிரேம்குமார்.. உல்லாச அழகிகளை புக் செய்துகொடுத்த மோகன் ராஜ்.. பிறகு நடந்த விபரீதம்.!
prostitution broker arrested
சீர்காழியை சேர்ந்த பிரேம்குமார் என்பவர் தனது நண்பர்களுடன் கொடைக்கானலுக்கு சுற்றுலா சென்றுள்ளார். அங்கு தங்குவதற்கு நல்ல காட்டேஜ் தேடியபோது, அவரை தொடர்பு கொண்ட மோகன் ராஜ் என்பவர் தன்னிடம் குறைந்த விலையில் காட்டேஜ்கள் இருப்பதாக கூறியுள்ளார்.
மேலும் தன்னிடம் வட இந்திய அழகிகள் இருப்பதாகவும், தங்கள் விருப்பப்பட்டால் அவர்களுடன் உல்லாசமாக இருக்கலாம் எனவும், அதற்கு தனியாக பணம் கொடுக்கவேண்டும் என கூறியுள்ளார். மோகன்ராஜ் உடன் சென்ற பிரேம் குமார் மற்றும் அவரது நண்பர்கள் காட்டேஜ் உள்நுழைந்ததும் காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர்.
இதையடுத்து அங்கு விரைந்து வந்த காவல்துறையினர் விபச்சார புரோக்கர் மோகன் ராஜை கைது செய்தனர். மேலும் 6 வடமாநில இளம்பெண்களை மீட்டனர். மோகன் ராஜ் கூட்டாளிகள் ஸ்டீபன் மற்றும் சுரேஷ் ஆகியோர் தப்பி சென்று விட்டனர், இருவரையும் காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
English Summary
prostitution broker arrested