8 வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை... தாளாளர் மனைவியுடன் கைது..!
Prosecutor arrested for sexually harassing 8th grade student
மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக தாளாளர் கைது செய்யப்பட்டார்.
திருச்சி மாவட்டம், புத்தூர் வண்ணாரப்பேட்டை பகுதியில் அமைந்துள்ளது CE மேல் நிலைப்பள்ளி. அந்த பள்ளியில் படிக்கும் மாணவ மாணவிகளுக்கான விடுதி செயல்பட்டு வருகிறது.
இந்நிலையில், அந்த விடுதியில் தங்கி படித்து வரும் பெற்றோரால் கைவிடப்பட்ட மாணவிக்கு அந்த பள்ளியின் தாளாளர் ஜேம்ஸ் கடந்த பல பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார்.
இதுகுறித்து அந்த மாணவி தாளாளரின் மனைவியிடம் அந்த சிறுமி தெரிவித்துள்ளார். ஆனால், அந்த பெண்மணி இதனை கண்டுகொள்ளவில்லை. உடன் படிக்கும் மாணவிகள் மூலம் இந்த விஷயம் காவல்துறையின் காதுகளுக்கு எட்டவே வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
இதனை அடுத்து அவர்களை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்த காவல்துறையினர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
Prosecutor arrested for sexually harassing 8th grade student