தனியார் பள்ளி வேன் மோதிய விபத்தில் 8 வயது சிறுமி உயிரிழப்பு - Seithipunal
Seithipunal


ராணிப்பேட்டை மாவட்டத்தில் தனியார் பள்ளி வேன் மோதிய விபத்தில் 8 வயது சிறுமி உயிரிழந்துள்ளார்.

ராணிப்பேட்டை மாவட்டம் கீழாந்துறை பகுதியை சேர்ந்தவர் தணிகைவேல். இவரது மகள் சிவானிஸ்ரீ(8), சம்பத்ராயன்பேட்டையில் உள்ள அரசு பள்ளியில் 3ஆம் வகுப்பு படித்து வந்தார்.

இந்நிலையில் நேற்று மாலை சிவானி ஸ்ரீ வீட்டிலிருந்து அதே பகுதியில் உள்ள ஆசிரியரிடம் டியூஷனுக்கு சைக்கிளில் சென்றுள்ளார்.

அப்பொழுது அவ்வழியாக வந்த தனியார் பள்ளி வேன் எதிர்பாராத விதமாக சிவானி ஸ்ரீ மீது மோதியுள்ளது. இதில் பலத்த காயமடைந்த சிறுமியை அப்பகுதியில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

ஆனால் அங்கு பரிசோதனை செய்த மருத்துவர் சிறுமி வரும் வழியிலேயே உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளார்.

இதையடுத்து இந்த விபத்து குறித்து தகவல் அறிந்து வந்த அரக்கோணம் காவல்துறையினர், வழக்கு பதிவு செய்து விபத்தை ஏற்படுத்தி தப்பி ஓடிய டிரைவரை தேடி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Private school van accident in ranipet


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->