இருசக்கர வாகனத்தின் மீது தனியார் பேருந்து மோதி விபத்து.! புது மாப்பிள்ளை உயிரிழப்பு.!
Private bus twowheeler accident in virudhunagar
விருதுநகர் மாவட்டத்தில் இருசக்கர வாகனம் மீது தனியார் பேருந்து மோதிய விபத்தில் புது மாப்பிள்ளை உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
விருதுநகர் மாவட்டம் வெங்கடாசலபுரத்தைச் சேர்ந்தவர் சங்கரேஸ்வரன் (வயது 23). இவருக்கும் மதுரை மாவட்டம் நடுவக்கோட்டையைச் சேர்ந்த ஜான்சிராணிககும் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.
இந்நிலையில் சங்கரேஸ்வரன் மனைவியுடன் மாமனார் வீட்டிற்கு சென்று விட்டு, நேற்று இருசக்கர வாகனத்தில் வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார்.
அப்பொழுது சாத்தூர் அருகே உள்ள இனாம்ரெட்டியபட்டி சாலையில் வந்தபோது சென்னையில் இருந்து நாகர்கோவில் சென்ற தனியார் பேருந்து ஒன்று எதிர்பாராத விதமாக இரு சக்கர வாகனத்தின் மீது மோதியது.
இதில் தூக்கி வீசப்பட்டு பலத்த காயமடைந்த சங்கரேஸ்வரன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். மேலும் ஜான்சிராணி படுகாயம் அடைந்த நிலையில் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதையடுத்து இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த போலீசார் வழக்கு பதிவு செய்து பேருந்து ஓட்டுநரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
English Summary
Private bus twowheeler accident in virudhunagar