பத்திரிகையாளர் மீது மர்ம நபர்கள் கொலைவெறி தாக்குதல்! பரபரப்பு பின்னணி!
Press reporter attacked by unknown persons in virudhunagar
பிரபல வார இதழின் விருதுநகர் மாவட்ட செய்தியாளராக இருப்பவர் கார்த்தி. இன்று சிவகாசியில் மர்ம நபர்களால் தாக்கப்பட்டு கடுமையான காயங்களுடன் சிவகாசியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இன்று வெளியான அந்த பத்திரிகையில், விருதுநகர் மாவட்ட அரசியலில் தமிழக அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கும், சாத்தூர் சட்டமன்ற உறுப்பினர் ராஜவர்மனுக்கும் இடையே உட்கட்சி பிரச்சனை நிலவுவதாக செய்தி வெளியானது.
இந்த நிலையில், செய்தியாளர் தாக்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தாக்கப்பட்ட செய்தியாளர் கார்த்தி கடுமையான காயங்களுடன் சிவகாசியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
English Summary
Press reporter attacked by unknown persons in virudhunagar