சுஜித்துக்கு கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்திய பிரேமலதா விஜயகாந்த்!
premalatha vijayakanth mourning sujith
திருக்காட்டுப்பள்ளியில் குழந்தை சுஜித்துக்கு தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் கண்ணீர் அஞ்சலி செலுத்தினார். அதனை தொடர்ந்து சுஜித்தின் பெற்றோரை சந்தித்து ஆறுதல் கூறினார். அதன் பிறகு செய்தியாளருக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியவை, எத்தனை கோடி நிதி கொடுத்தாலும் சுஜித்தின் மரணத்திற்கு ஈடாகாது.
குறைசொல்வதை விட இதை பாடமாக எடுத்துக்கொண்டு இனி இதுபோன்று நடக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும். இறப்பில் கூட திமுக அரசியல் செய்கிறது.
இந்நிலையில், சுஜித்தின் குடும்பத்திற்கு தேமுதிக சார்பில், 1 லட்சம் நிவாரண நிதியை தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் வழங்கினார்.
English Summary
premalatha vijayakanth mourning sujith