ஸ்டாலினின் பொட்டு விவகாரம்!! அமைச்சர் முன்பே குட்டு வைத்த பிரேமலதா!!
premalatha says about dmk stalin
சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக கட்சி அலுவலகத்தில் இப்தார் நோன்பு நிகழ்ச்சி தே.மு.தி.க சார்பில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சி விஜயகாந்த் தலைமையில் நடைபெற்றது. இதில், தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த், அதிமுக அமைச்சர் ஜெயக்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இதில் தேமுதிக தொண்டர்களும் பங்கேற்றனர்.
இதில் கலந்துகொண்டு பேசிய அமைச்சர் ஜெயக்குமார், ‘சிலர் முஸ்லீம்கள் குறித்து வாய்கிழிய பேசுகின்றனர். ஆனால் அவர்களை கவுரவபடுத்தும் வகையில் தனது சொந்த செலவில் ஏதேனும் விருந்தோம்பல் நிகழ்வை நடத்தியதுண்டா?'
இஸ்லாமிய மக்களை கவரவிக்கும் விதத்தில் அ.தி.மு.க, தே.மு.தி.க உள்ளிட்ட கட்சிகளே நோன்பு நிகழ்ச்சி நடத்திவருகின்றன. விஜயகாந்த் நான் சபாநாயகராக இருந்தபோது எனக்கு கைகொடுத்து உதவியவர். மேலும், சரியான நேரத்தில் சட்டசபை விவாதம் நடத்த உதவி செய்தவர் விஜயகாந்த். நாங்கள் அண்ணன் தம்பி போல இருந்தோம்’ என கூறியுள்ளார்.
அதன்பின்னர், பேசிய பிரமேலதா, ‘விஜயகாந்த் எம்.ஜி.ஆரை தான் ரோல் மாடலாக எடுத்துக்கொண்டு செயல்பட்டார். எங்கள். எங்கள் கட்சி அலுவகத்தில் எம்.ஜி.ஆர் சிலையை வைக்க காரணம் அதுதான். இதனால், தான் அவரை கருப்பு எம்.ஜி.ஆர் என்று மக்கள் அழைக்கின்றனர். இங்கு எல்லாம் மதமும் ஒன்றுதான்.
இறைவன் ஒன்றாக தான் நம்மை படைத்தார். கோடுகளை போட்டு நாம் தான் பிரித்து கொண்டோம். நாங்கள் கடவுள் இருப்பதாக நம்புகிறோம். இருப்பினும், சிலர் பொட்டு வைத்தால் இங்கே அழித்துவிட்டு வெளியூர் சென்று வைத்துக்கொள்வார்கள். திருட்டுத்தனமாக சாமி கும்பிடுவார்கள்’ என திமுக தலைவர் ஸ்டாலினை சாடியுள்ளார்.
English Summary
premalatha says about dmk stalin