குழந்தை பெற்றுக்கொள்ள அரசு மருத்துவமனைக்கு வந்த நிறைமாத கர்ப்பிணி மாயம்! கதறும் குடும்பத்தார்கள்.!
குழந்தை பெற்றுக்கொள்ள அரசு மருத்துவமனைக்கு வந்த நிறைமாத கர்ப்பிணி மாயம்! கதறும் குடும்பத்தார்கள்.!
சென்னை புரசைவாக்கம் , சூளையைச் சேர்ந்தவர் சுதாகர். இவரது மனைவி, காயத்ரி. இவர் நிறைமாத கர்ப்பிணியாக இருந்தார். அதனால் காயத்ரி சேப்பாக்கத்தில் உள்ள தாய் வீட்டில் இருந்துள்ளார்.
பின்னர் மருத்துவர்கள் பரிசோதனை செய்து பார்த்ததில் டிசம்பர் 17 ஆம் தேதி பிரசவ தேதி எனவும், அதற்குள் குழந்தை பிறக்க வாய்ப்பு இருப்பதாகவும் கூறியிருந்தனர்.
இந்நிலையில் காயத்ரி திருவல்லிக்கேணி கஸ்தூரிபா காந்தி அரசு மருத்துவமனையில், கணவர் சுதாகர் மற்றும் தாயுடன் இரு தினங்களுக்கு முன்பு சென்று சேர்ந்துள்ளார்.அங்கு மருத்துவமனை தாழ்வாரத்தில் காயத்ரி நடைபயிற்சி செய்துள்ளார்.
ஆனால் சிறிது நேரத்துக்குப் பிறகு நடைப்பயிற்சி மேற்கொண்ட காயத்ரியை அங்கு காணவில்லை. இந்நிலையில் அவரை கணவர் சுதாகரும் , காயத்ரியின் தாயும் மருத்துவமனை மற்றும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளிலும் தேடியுள்ளனர்.
மேலும் 2 நாள்களாக எங்கு தேடியும் கிடைக்காத நிலையில், இன்று திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் சுதாகர் புகார் அளித்துள்ளார்.அதனை தொடர்ந்து போலீசார் தீவிர தேடுதலில் ஈடுபட்டுள்ளனர்.
English Summary
pregnant women kidnapped from government hospital