குடும்ப தகராற்றால் கர்ப்பிணி பெண் எடுத்த விபரீத முடிவு... காவல்துறை விசாரணை..!
Pregnant woman commits suicide due to family dispute
குடும்ப தகராற்றால் கர்ப்பிணி பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ராணிப்பேட்டை மாவட்டம், அரும்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் மூர்த்தி. இவருக்கு மோகனா என்பவருடன் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடைபெற்றது. மூர்த்தி திருமணத்தில் பணியாற்றி வருவதால் சில மாதங்களுக்க்கு முன் விடுமுறையில் சொந்த ஊருக்கு வந்துள்ளார்.
இந்நிலையில், கணவன் மனைவிக்கிடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்படும் கூறப்படுகிறது. இதனால், மன உளைச்சலில் இருந்த மோகனா எலி மருந்தை குடித்து தற்கொலைக்கு முயன்றார். இதனை கண்ட அவரது உறவினர்கள் அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கர்ப்பிணி பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தற்கொலை எண்ணம் உங்களுக்கு தோன்றினால் உங்களுக்கு ஆலோசனை தரவும், ஆறுதல் சொல்லவும் அழையுங்கள்.
104 , 044 -2464000 (ஸ்னேகா ஃபௌண்டேஷன் ட்ரஸ்)
022-25521111 (ஐகால் ப்யசோசோசியல் ஹெல்ப்லைன்) (Mon – Sat, 8am–10pm) உங்கள் போன் நம்பர் கூட பதிவு செய்யப்படாது. உங்கள் பெயர், முகவரி எதுவும் சொல்ல தேவையில்லை. உங்கள் அழைப்பு பதிவு செய்யப்படாது. உங்கள் மனம்விட்டு பேசுங்கள்., தற்கொலை எண்ணத்தில் இருந்து மீண்டு வரலாம்.
English Summary
Pregnant woman commits suicide due to family dispute