மருத்துவமனை வராண்டாவில் பிரசவ வலியால் துடிதுடித்து, கர்ப்பிணிபெண்ணிற்கு நேர்ந்த விபரீதம்.!!வைரலாகும் பதறவைக்கும் பகீர் வீடியோ!! - Seithipunal
Seithipunal


கோலார் தங்கவயல் ராபர்ட்சன்பேட்டை பகுதியில் வசித்து வருபவர் ரியாஸ். இவரது மனைவி சமீனா.  நிறைமாத கர்ப்பிணியான சமீனாவிற்கு நேற்று  திடீரென பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் சமீனாவின் கணவர் ரியாஸ் மற்றும் அவரது உறவினர்கள் அவரை பிரசவத்திற்காக ராபர்ட்சன்பேட்டை பகுதியில் உள்ள அரசு மகப்பேறு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.

 அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஸ்கேன் எடுத்து வருமாறு கூறி அனுப்பியுள்ளனர். இதனைத் தொடர்ந்து ஸ்கேன் எடுத்துவிட்டு மீண்டும் மருத்துவமனைக்கு சமீனா திரும்பியநிலையில் அங்கு   மருத்துவர்கள் மற்றும் ஊழியர்கள் யாரும் கவனிக்காமல் அலட்சியமாக இருந்துள்ளனர்.

 இந்நிலையில் சமீனா மருத்துவமனையின் வராண்டாவில் உட்கார்ந்தவாறே வலியால் துடித்துள்ளார் மேலும் நான்கு மணி நேரம் அவர் பிரசவ வலியால் அவதிப்பட்ட நிலையில் அவரது குடும்பத்தார்கள் சமீனாவை கோலார் தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றுள்ளனர்.அவருக்கு அங்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தநிலையில் சமீனாவை மட்டுமே காப்பாற்ற முடிந்துள்ளது. குழந்தை இறந்தே பிறந்தது.



 

 இந்நிலையில் சமீனாவின் குழந்தை இறந்ததற்கு, அரசு மருத்துவமனை மருத்துவர்களின் அலட்சியம்தான் காரணம் என அவரது உறவினர்கள் குற்றச்சாட்டுகள் வைத்து வருகின்றனர் இந்நிலையில். மருத்துவமனை வராண்டாவில் சமீனா பிரசவ வலியால் துடித்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.  இது பார்ப்போரை பதற வைத்துள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

pregnant lady suffered by pain in hospital bolcony


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->