கர்ப்பிணி என்றும் பாராமல், துடிதுடிக்க மோசம் செய்த கயவன்.! அரங்கேறிய கொடூரம்.!
pregnant lady killed by husband in pullampadi
திருச்சி அருகே புள்ளம்பாடி யைச் சேர்ந்த ஜீவிதா என்ற பெண்ணிற்கு மலேசியாவைச் சேர்ந்த கமல் என்பவருடன் 7 மாதங்களுக்கு முன்னதாக திருமணம் நடைபெற்றுள்ளது. திருமணத்திற்கு பின்பு கமல் மலேசியாவிற்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்துள்ளார். எந்த வேலைக்கும் செல்லாமல் வீட்டிலேயே இருப்பது குறித்து ஜீவிதா கேள்வி எழுப்பியிருக்கிறார்.
இதன் காரணமாக ஜீவிதாவிற்கும் கமல்க்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதுபோல கடந்த நான்காம் தேதி இருவருக்கும் சண்டை ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த கமல் தனது மனைவியின் கழுத்தை நெரித்து, அறுத்து கொலை செய்து இருக்கின்றார்.
அதன்பின்னர் ரத்தக்கரை படிந்த அந்த கையோடு அங்கிருந்து வெளியேறி தப்பிக்க முயற்சித்துள்ளார். இருப்பினும் இந்த கோலத்தைக் கண்ட அக்கம் பக்கத்தினர் அவசரஅவசரமாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்க அவர்கள் விரைந்து வந்து கமலை கைது செய்தனர்.
கொலை செய்யப்பட்ட ஜீவிதா 3 மாத கர்ப்பிணியாக இருந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
pregnant lady killed by husband in pullampadi