கர்ப்பிணி பெண்ணிற்கு அவசர இரத்தம் தேவை.. உதவிக்கரம் நீட்டிய காவல் அதிகாரிகள்.!!
Pregnant girl blood donate by Police officers in Theni
தேனி மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதி செய்யப்பட்ட கர்ப்பிணி பெண்ணிற்கு கடந்த சில நாட்களுக்கு முன்னதாக அறுவை சிகிச்சை மூலமாக குழந்தை பிறந்துள்ளது. இதனையடுத்து பெண்மணிக்கு அதிகளவு உதிரப்போக்கு ஏற்பட்டுள்ளது.
இதனால் ஆபத்தான நிலைக்கு பெண்மணி செல்லவே, அவருக்கு "ஓ" பாசிட்டிவ் இரத்தம் தேவைப்பட்டுள்ளது. மேலும், அந்த இரத்த வங்கியிலும் இரத்தம் இல்லை. இதனையடுத்து மருத்துவர்கள் தங்களுக்கு தெரிந்த நபர்களுக்கு விஷயங்களை பகிர்ந்துள்ளனர்.
இந்த தகவல் ஆயுதப்படை காவலர்களுக்கு தகவல் தெரியவந்த நிலையில், தேனி ஆயுதப்படை காவல் அதிகாரிகளான வினித்குமார், விக்னேஷ், ராஜேஷ் கண்ணா ஆகியோர் முன்வந்துள்ளனர். இவர்கள் விரைந்து சென்று இரத்த தானம் வழங்கியுள்ளனர்.
இதன்பின்னர், பெண்ணிற்கு காவல் அதிகாரிகளின் இரத்தம் செலுத்தப்பட்டு, அவர் நலமுடன் இருக்கிறார். மேலும், இரத்தம் சரியான நேரத்தில் கொடுத்த காவல் அதிகாரிகளுக்கு பலரது தரப்பில் பாராட்டு குவிந்து வருகிறது.
Tamil online news Today News in Tamil
English Summary
Pregnant girl blood donate by Police officers in Theni