சாலையோரம் சடலமாக கிடந்த நிறைமாத கர்ப்பிணி பெண்..! - Seithipunal
Seithipunal


திண்டுக்கல் மாவட்டத்தில் இருக்கும் வேடசந்தூர் அருகே நிறைமாத கர்ப்பிணி ஒருவர் சாலையோரம் விழுந்து கிடந்தது குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

திண்டுக்கல் மாவட்டத்தில் இருக்கும் வேடசந்தூர் சங்கர் நகரை சேர்ந்த சுஷ்மிதா என்பவர் நிறைமாத கர்ப்பிணியாக இருந்துள்ளார். இவர் கவுண்டச்சிபட்டியில் இருக்கும் தனது உறவினரின் வீட்டுக்கு செல்வதற்காக நேற்று வீட்டில் இருந்து கிளம்பியுள்ளார்.

ஆனால், அதன் பின்னர் வீடு திரும்பவில்லை. இது குறித்து காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இன்று காலை கவுண்டச்சி பட்டியில் சாலையோரத்தில் சுமிதாவின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. வயிற்றிலிருந்த குழந்தையும் இருந்துள்ளது.

அவர் கழுத்தில் இருந்த 5 சவரன் தங்கச் சங்கிலி காணாமல் போயிருக்கின்றது. அவரது செல்போன் மற்றும் கைப்பை உள்ளிட்டவை சம்பவ இடத்தில் கைப்பற்றப்பட்டது. சுஸ்மிதாவின் உடலில் எந்தவிதமான காயங்களும் இல்லை. ஆனால் அவர் எப்படி எப்படி இறந்திருக்கக்கூடும் என்பது குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

pregnancy woment death in road


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->