பெரம்பலூர் || பள்ளி சென்று வீடு திரும்பிய மாணவி மர்ம மரணம்.! - Seithipunal
Seithipunal


பெரம்பலூர் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் பகுதியை சேர்ந்தவர் கணேசன். இவரது மகள் பாக்கியலட்சுமி. இவர் அப்பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வருகிறார். 

இந்த நிலையில் பாக்கியலட்சுமி வழக்கம் போல் நேற்று மாலை பள்ளியில் இருந்து வீட்டிற்கு வந்துள்ளார்‌. பின்னர் கழிவறைக்கு சென்ற அவர் அங்கு மயங்கி விழுந்துள்ளார். 

உடனடியாக அவரை ஸ்ரீபெரும்புதூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் பாக்கியலட்சுமி ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். 

இது தொடர்பாக ஸ்ரீபெரும்புதூர் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். பள்ளிக்கு சென்று வந்த மாணவி திடீரென்று உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Pram


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->