ஆர்எஸ்எஸ் பேரணி ஒத்திவைப்பு! சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யவும் முடிவு!
Postponement of rally of RSS in tamilnadu
தமிழகத்தில் ஆர்எஸ்எஸ் பேரவையின் நடத்துவதற்கான முன்னேற்பாடுகள் நடந்து வந்த நிலையில் தற்போது ஆர்எஸ்எஸ் பேரணி ஒத்தி வைப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த அக்டோபர் 2ம் தேதி நடைபெறவிருந்த ஆர்எஸ்எஸ் பேரணி காவல்துறை அனுமதி வழங்காததால் அதனை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆர்எஸ்எஸ் சார்பில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கின் விசாரணை முடிவில் ஆர்எஸ்எஸ் பேரணி நடத்த சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கியது. எனினும் காவல்துறை தரப்பிலிருந்து மூன்று இடங்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டதால் நீதிமன்ற அவமதிப்பு வழக்கை ஆர்எஸ்எஸ் தொடர்ந்திருந்தது. இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் நேற்றைய தினம் 44 இடங்களில் பேரணி நடத்த அனுமதி வழங்கியது.
எனினும் தமிழகத்தில் ஆறு இடங்களில் ஆர்எஸ்எஸ் பேரணி நடத்த உளவுத்துறை அறிக்கை தடை விதிக்கப்பட்டது. அதேபோன்று ஆர்எஸ்எஸ் அமைப்பினர் பேரணி செல்லும்போது கையில் தடியுடன் செல்வது அவர்களுடைய பாரம்பரியம். ஆர்எஸ்எஸ் அமைப்பினர் பேரணியும் பொழுது கையில் தடிகளை கொண்டு செல்ல கூடாது போன்ற பல்வேறு கட்டுப்பாடுகளுடன் போலீசார் அனுமதி வழங்கியதாக கூறப்படுகிறது.
இது காரணமாக ஆர்எஸ்எஸ் பேரணி நடத்தலாமா அல்லது ஒத்தி வைக்கலாமா என்று கடந்த இரண்டு நாட்களாக சென்னை தாம்பரத்தில் உள்ள ஆர்எஸ்எஸ் அமைப்பின் தலைமை அலுவலகத்தில் விவாதிக்கப்பட்டது. இதேபோன்று சம்பந்தப்பட்ட மாவட்ட காவல்துறை சார்பில் அனுப்பப்பட்ட சம்மனை ஆர்எஸ்எஸ் அமைப்பைச் சேர்ந்தவர்கள் கையெழுத்திட்டு பெற்றுக் கொள்ளவில்லை. அதே போன்று நிபந்தன்களுக்கு உட்பட்டு பேரணி நடத்துகிறோம் என்ற ஒப்புதல் படிவத்திலும் ஆர்எஸ்எஸ் அமைப்பினர் கையெழுத்திடவில்லை.
இந்த நிலையில் தற்பொழுது ஆர்எஸ்எஸ் அமைப்பின் காரிய கமிட்டி சார்பாக நாளை நடைபெறவிருந்த ஆர்எஸ்எஸ் பேரணி ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இது சம்பந்தமாக சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே ஆர்எஸ்எஸ் பேரணி ஒத்திவைத்தது குறித்து சமூக வலைதளங்களில் விவாதம் நடத்தக் கூடாது என ஆர்.எஸ்.எஸ் தொண்டர்களுக்கு அந்த அமைப்பு அறிவுறுத்தியுள்ளது.
English Summary
Postponement of rally of RSS in tamilnadu