அரக்கோணம் இரட்டைக்கொலை.. திருமாவளவனின் திருட்டுத்தனம்., ஸ்டாலினின் சாதிவெறி முகத்திரை அம்பலம்.!
Poovai JaganMoorthy Revolves Truth about Arakonam Twice Murder is not a Caste Murder
அரக்கோணத்தில் நடைபெற்ற இரட்டைக்கொலைகள் தமிழகம் முழுவதும் அதிர்ச்சியை அளித்த நிலையில், மதுபோதையில் ஏற்பட்ட தகராறுக்கு திமுக தலைவர் மு.க ஸ்டாலின் மற்றும் வி.சி.க தலைவர் திருமாவளவன் உட்பட திமுக கூட்டணி கட்சிகள் அனைத்தும் பாமக மற்றும் அதிமுக, வன்னியர்கள் மீது அபாண்டமான பல குற்றசாட்டுகளை முன்வைத்தனர். இவர்களின் பதிவுகளுக்கு சென்று முட்டுக்கொடுத்த பல முட்டாள்களுக்கு செருப்படி பதிலை பூவை ஜெகன் மூர்த்தியார் தெரிவித்துள்ளார்.
புரட்சி பாரதம் கட்சியின் தலைவர் ஜெகன் மூர்த்தியார் செய்தியாளர்களை சந்திக்கையில், " இந்த விஷயம் தொடர்பாக உள்ளூர் மக்களிடம் நேரில் சென்று விசாரணை செய்தேன். இந்த இரட்டைக்கொலை பிரச்சனை ஜாதி சண்டையில் நடந்தது இல்லை என்று கூறினார்கள்.
மேலும், பலியான இளைஞர்கள் எப்போதும் மதுபோதையில் பிரச்சனை செய்வதை வழக்கமாக வைத்துள்ளனர். சம்பவத்தன்றும் மது போதையில் பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இதனை பேசி தீர்க்க மீண்டும் சந்தித்துக்கொண்டதில் ஏற்பட்ட தகராறில் கொலை நடந்துள்ளது. சாதி ரீதியான பிரச்சனை என்றால் அங்கு இரு சமூகமும் மொத்தமாக திரண்டிருக்கும்.
அந்த ஊரில் பாமக கட்சியினர் கிடையாது. விடுதலை சிறுத்தைகள் கட்சியும் அங்கு கிடையாது. அங்கு உள்ள அனைத்து சமூக மக்களும் நட்புறவுடன் வசித்து வருகிறார்கள். கொலை செய்யப்பட்டவர்கள் எனது புரட்சி பாரதம் கட்சியை சார்ந்தவர்கள்.
விஷயத்தை அறிந்ததும் எனது கட்சி நிர்வாகிகளுடன் நேரில் சென்று விசாரணை செய்தோம். அவர்களிடம் விசாரணை செய்ததில் மேற்கூறிய தகவல் வெளியானது. இதனை சாதி பிரச்சனை என்று கூறி பாமக மீது குற்றம் சுமத்தி, இரட்டை கொலையை சாதிய மோதலாக உருவாக்க முயற்சி நடந்துள்ளது. இதனை அரசியலாக்குவதும், ஜாதிய மோதலை ஊக்குவிக்கும் வகையில் செயல்படுத்துவதும் தவறானது. இதனை ஒரு கட்சி வேலையாக வைத்துள்ளது " என்று தெரிவித்தார்.
Tamil online news Today News in Tamil
பொது எச்சரிக்கை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.
English Summary
Poovai JaganMoorthy Revolves Truth about Arakonam Twice Murder is not a Caste Murder