புல்லட்டில் போன பூசாரிக்கு நேர்ந்த பரிதாபம்.! தருமபுரி, அருகே நேர்ந்த சோகம்.!
poosari death in dharmapuri
தர்மபுரி மாவட்டத்தில் உள்ள இண்டூர் பகுதி அருகே அமைந்துள்ள பள்ளப்பட்டியை சேர்ந்த சக்திவேல் என்பவரது என்பவருக்கு மூர்த்தி என்ற 28 வயது மகன் இருந்துள்ளார். இவருக்கு திருமணம் ஆகவில்லை. அதே பகுதியில் உள்ள காளியம்மன் கோவிலில் பூசாரியாக இருந்து வந்துள்ளார்.
இந்த நிலையில், காரிமங்கலம் செல்வதற்காக அவர் தனது மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார். அப்போது, அந்த வழியாக வந்த ஆட்டோ ஒன்று எதிர்பாராதவிதமாக அவர் மீது மோதியுள்ளது. இதனால், வேகமாக தூக்கி வீசப்பட்ட மூர்த்தி படுகாயம் அடைந்தார்.
உடனடியாக அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். பின்னர், மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இருப்பினும், அவரது உடல்நிலை மிகவும் மோசமானதாக இருந்ததால், மீண்டும் தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர்.
அங்கு, மூர்த்தி சிகிச்சை பலனின்றி மிகவும் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் குறித்து காரிமங்கலம் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
English Summary
poosari death in dharmapuri