பூந்தமல்லி நெடுஞ்சாலையில் பயர் சேசிங் செய்த காவல்துறை.. விபத்தை ஏற்படுத்தி அலட்சியத்தில் காய்கறி வியாபாரி.!!
Poonamallee accident police chasing culprit arrest
சென்னையில் உள்ள விருகம்பாக்கம் பகுதியை சார்ந்தவர் கணேசமூர்த்தி. இவர் திருமழிசை காய்கறி சந்தையில் காய்கறி வியாபாரம் செய்து வருகிறார். நேற்று முன்தினத்தின் இரவன்று திருமழிசை சந்தைக்கு செல்ல பூந்தமல்லி நோக்கி காரில் பயணம் செய்து கொண்டு இருந்துள்ளார்.
இந்த நேரத்தில், தனியார் நிறுவன ஊழியரான அயப்பாக்கம் ரஞ்சித்குமார் (வயது 27), தனது இரு சக்கர வாகனத்தில் அம்பத்தூர் சாலையில் வானகரம் நோக்கி பயணம் செய்துள்ளார். இவர் பூந்தமல்லி நெடுஞ்சாலை அருகே சென்ற நேரத்தில், குறுக்கே வந்த கார் ரஞ்சித்க்குமாரின் மீது வேகமாக மோதவே, ரஞ்சித்குமார் காரின் மேல் பகுதியில் விழுந்துள்ளார்.
மேலும், காரின் முன்பக்கம் மற்றும் கண்ணாடி சேதமடைந்த நிலையில், கார் மோதிய வேகத்தில் இருவரும் பலியாகியிருக்கலாம் என்று எண்ணிய கணேசமூர்த்தி காரை நிறுத்தாமல் இயக்கி சென்றுள்ளார். இதனைக்கண்டு பாதுகாப்பு பணிக்காவல் துறை அதிகாரி காரை விரட்டி செல்லவே, அதிவேகத்துடன் காரை கணேசமூர்த்தி இயக்கி சென்றுள்ளார். காயத்துடன் மேலே இருந்த ரஞ்சித், காரை கெட்டியாக பிடித்துக்கொண்டுள்ளார்.
சுமார் 2 கிலோமீட்டர் தூரம் சென்ற பின்னர் காவல் துறையினர் காரை மடக்கிப்பிடித்தனர். பின்னர் காரில் இருந்து இறங்கிய கணேசமூர்த்தி, விபத்தில் காயமடைந்தவர் தனது காரின் மேல்புறம் இருப்பதை அறியாமல் காரை இயக்கியது குறித்து அதிர்ச்சி அடைந்துள்ளார். காயமடைந்த இரண்டு நபர்களும் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்ட நிலையில், கணேசமூர்த்தியை காவல் துறையினர் கைது செய்தனர்.
Tamil online news Today News in Tamil
English Summary
Poonamallee accident police chasing culprit arrest