பொங்கல் பரிசிற்காக அடித்து கொள்ளும் பொது மக்கள்!! ஆடிப்போன ரேஷன் ஊழியர்  - Seithipunal
Seithipunal


பொங்கல் விழாக்கள் நெருங்கிக்கொண்டிருக்கும் நிலையில்  தமிழக மக்களுக்கான பொங்கல் பரிசு தொகுப்பை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார்.மேலும் முகாம்களில் தங்கியுள்ள தமிழர் குடும்பங்களுக்கும் இத்தகைய பரிசுத்தொகுப்பு வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.   

இதில் குடும்பஅட்டைதாரர்கள் அனைவருக்கும்  தலா ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, இரண்டு அடி நீளக் கரும்புத்துண்டு, 20 கிராம் முந்திரி, 20 கிராம் உலர் திராட்சை மற்றும் 5 கிராம் ஏலக்காய் அடங்கிய சிறப்பு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த பொங்கல் பரிசு தொகுப்பு மேலும் இந்த பரிசுத்தொகுப்பு பொங்கல் திருநாளுக்கு முன்னரே குடும்ப அட்டைதாரர்களுக்கு சம்பந்தப்பட்ட நியாய விலைக் கடைகள் மூலம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. 

இந்நிலையில் அறிவிக்கப்பட்ட சில நாட்களில் இருந்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இந்த பரிசு பொருட்கள் கொடுக்கப்பட்டு வருகிறது. இதேபோல் இன்று பெரம்பலூர் மாவட்டம் அகரம்சீகூரை அடுத்த காளிங்கராயநல்லூர் பகுதியில் இன்று இந்த பரிசு பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. 

அங்கு வேலை செய்யும் ரேஷன் கடை ஊழியர் அப்பகுதி மக்களுக்கு, தினமும் 100 ரேஷன் கார்டுகள் வீதம் பொருட்க்களை வழங்கி வருகின்றார். இதனால், மக்களும் சிரமமின்றி வாங்கி செல்கின்றனர். இருப்பினும் சில உள்ளூர் அரசியல்வாதிகள் அப்பாவி மக்களை நீண்ட வரிசையில் நிற்க, அதிகாரத்தை பயன்படுத்தி ஒன்றிற்கும் மேற்பட்ட கார்டுகளை வைத்து பரிசு பொருட்கள் வாங்கி கொண்டு இருப்பதாக அப்பகுதி மக்கள் மிகவும் வருத்தப்படுகின்றனர். 

மேலும், மற்ற நாட்களிலும் பின்தங்கிய குடும்பங்களுக்கு பொருட்களை உபயோகிக்காமல், சில அரசியல் சார்ந்த குடும்பங்களுக்கு மொத்தமாக உபயோகிப்பதாகவும் இதனை அப்பகுதியில் எவரும் கண்டு கொள்ளவில்லை என்றும்,

மேலும், அவர்களுக்கு இரவு நேரங்களில் பொருட்கள் வழங்கப்படுவதாகவும், பின்னர் அப்பாவி மக்களிடம்' இந்த மாதம் பொருட்கள் தீர்ந்து விட்டன. அடுத்த மாதம் வாருங்கள்' என ஊழியர் அனுப்பி விடுவதாகவும் தொடர்ந்து அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

இதுகுறித்து புகார்கள் தெரிவித்த போதும், யாரும் கண்டு கொள்வதில்லை. அனைவரும் சேர்ந்து கொள்ளையடிக்கின்றனர். என கூறுகின்றனர்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

pongal gift distribute in ration


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->