6 மாவட்டங்களை தொடர்ந்து, மேலும் 4 மாவட்டங்களில் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி.! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்த தமிழக அரசு கடந்த சில நாட்களுக்கு முன்னதாக அனுமதி வழங்கியது. மதுரை உட்பட 6 மாவட்டங்களில் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி வழங்கியது. தற்போது மேலும் 4 மாவட்டங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில், வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, சிவகங்கை மாவட்டத்தில் ஜல்லிக்கட்டு நடத்த தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது. ஜனவரி 14 ஆம் தேதி முதல் ஜனவரி 31 ஆம் தேதி வரை வடநாடு, ஜல்லிக்கட்டு, எருது விடும் நிகழ்ச்சி நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 

மேலும், வேலூர் மாவட்டத்தில் 25 இடங்களிலும், திருப்பத்தூர் மாவட்டத்தில் 13 இடங்களிலும், சிவகங்கையில் 1 இடங்களிலும், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 3 இடங்களிலும் நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. முன்னதாக 6 மாவட்டத்தில் ஜல்லிக்கட்டு நடத்த தமிழக அரசு அனுமதி வழங்கியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Pongal Festival Jallikattu Another 4 Districts Approved by TN Govt


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->