சாதி, மத, பேதமின்றி உற்சாகமான பொங்கல் கொண்டாட்டம்..!
pongal celebration successfully by peoples
சூரியனுக்கு பொங்கல் வைத்து படைக்கும் இந்த நாளை சூரிய பொங்கல் என்று அழைப்பது வழக்கம். தமிழகம் முழுவதும் இன்று தமிழர்களின் பாரம்பரிய விழாவான பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட்டு வருகின்றது.
உலகில் இருக்கும் அனைத்து உயிர்களையும் காக்கும் இயற்கை அன்னையை வணங்கும் பொருட்டு தை மாதத்தின் முதல் நாளான இன்று பொங்கல் விழா கொண்டாடப்பட்டு வருகின்றது. புது பானையில் புத்தரிசியில் பொங்கல் வைத்து சூரியனுக்குப் படைக்கும் இந்த நாளை சூரிய பொங்கல் என்று அழைப்பது வழக்கம்.
இந்த நிலையில் தமிழக மக்கள் அனைவரும் ஜாதி, மத பேதமின்றி பொங்கல் திருநாள் வாழ்த்துக்களை நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் தெரிவித்து வருகின்றனர்.
வண்ண, வண்ண கோலமிட்டு வாசலில் வகை, வகையாய் தோரணம் கட்டி உற்சாக பொங்கல் பண்டிகையை கொண்டாடி வருகின்றனர். செய்திப்புனல் சார்பாக வாசகர்கள் அனைவருக்கும் பொங்கல் நல்வாழ்த்துக்கள்.
English Summary
pongal celebration successfully by peoples