பொடிக்கு புகையிலை கூட சிக்காத சோகம்.! மகிளா காங்கிரஸ் பொங்கல் கொண்டாட்டத்தில் போங்கு..!!
pongal celebration by magila congress
சென்னையில் உள்ள காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகமான சத்தியமூர்த்தி பவன் அலுவலகத்தில்., மகிளா காங்கிரஸ் கட்சியின் சார்பாக சமத்துவ பொங்கல் விழாவானது நடைபெற்றது.
இந்த விழாவிற்கு வருகை தரும் அனைவருக்கும் எவர்சிலவர் பானை மற்றும் கரும்பு., அரிசி இலவசமாக வழங்கப்படும் என்று அறிவிப்பு செய்யப்பட்டு இருந்தது. மேலும்., சுமார் 10 க்கும் மேற்பட்ட கரும்பு கட்டுகளும் குவித்து வைக்கப்பட்டு இருந்தது.
இந்த விஷயத்தை அறிந்த சில நிர்வாகிகள் தங்களின் தெரு பகுதியை சார்ந்த பெண்களை கூட்டத்திற்கு அழைத்து வைத்திருந்தனர். இவர்களில் கூட்டத்தில் கலந்து கொண்ட 20 பெண்களுக்கு மட்டும் சில்வர் பானை மற்றும் கரும்பு வழங்ப்பட்டுள்ளது.
மேலும்., தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவரான கே.எஸ்.அழகிரி முன்னிலையில் கொடுத்துவிட்டு பெற்று சென்றுள்ளனர். முக்கிய பெண் நிர்வாகிகள் மட்டும் மாலையினை கழுத்தில் அணிவிக்க அனுமதி செய்யப்பட்டுள்ளனர்.
இதனை கண்டு கடும் விரக்திக்கு உள்ளாகி சில்வர் பானை கிடைக்காவிட்டாலும்., கரும்பு மட்டுமாவது கிடைக்குமா? என்று காத்திருந்த பெண்களுக்கு ஏமாற்றம் மட்டுமே கிடைத்தது. மேலும்., இவர்களுக்கு ரூ.200 கொடுத்து அழைத்து வந்ததாக தகவல் கூறப்பட்டது...
இதனால் ஏற்பட்ட கடுமையான ஆத்திரத்தில் பெண்கள் முற்றுகையிட்டனர். இதனால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டாலும்., பொங்கல் வைத்த பின்னர் காங்கிரஸ் பெண் தொண்டர்கள் அனைவரும் நடனமாடினர்.
Tamil online news Today News in Tamil
English Summary
pongal celebration by magila congress