கள்ளகாதலால் கொடூர கொலை.. காதலில் துவங்கி, மோதலில் வெடித்து அரங்கேறிய சோகம்.!! - Seithipunal
Seithipunal


தமிழகத்தின் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள திருக்கோவிலூர் மாடம்பூண்டி கூட்டுரோடு பகுதியை சார்ந்தவர் ராஜேஷ்குமார் (வயது 23). இவர் பணியின் காரணமாக புதுச்சேரியில் தங்கியிருந்து பணியாற்றி வரும் நிலையில், புதுச்சேரியில் இருந்து திருபுவனைக்கு சென்ற நேரத்தில், அப்பகுதியை சார்ந்த காயத்ரி என்ற பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. 

இந்த பழக்கமானது இவர்களுக்குள் காதலாக மாறவே, இருவரும் காதலித்து திருமணம் செய்துகொண்டுள்ளார். இவர்கள் இருவருக்கும் ஒன்றரை வயதுடைய பெண் குழந்தை உள்ள நிலையில், கணவருடன் மாமியார் வீட்டில் காயத்ரி வசித்து வந்துள்ளார். அங்கு காயத்ரிக்கும், மற்றொரு நபருக்கும் இடையே கள்ளக்காதல் பழக்கம் ஏற்பட்டுள்ளது. 

இந்த விஷயத்தை அறிந்த ராஜேஷ் தனது மனைவியிடம் சண்டையிட்ட நிலையில், முதலியார்பேட்டை மற்றும் திருவக்கோலவிலூர் பகுதியில் மாறி மாறி தங்கியிருந்து பணியாற்றி வந்துள்ளார். இந்த சூழ்நிலையில், ராஜேஷ்குமாரின் மைத்துனர் செல்வராஜ் சமாதானம் பேசி தங்கையுடன் குடும்பம் நடத்த வைத்துள்ளார். 

இந்நிலையில், நேற்று முன்தினத்தின் போது வெளியே சென்ற ராஜேஷ் வீட்டிற்கு திரும்பாத நிலையில், அங்குள்ள மல்லிகை சவுக்குத்தோப்பு பகுதியில் பிணமாக மீட்கப்ட்டர். இது குறித்து காவல் துறையினருக்கு தகவல் தெரியவந்ததும், சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர் ராஜேஷின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். பின்னர் முதற்கட்ட விசாரணையை துவங்கினர். 

இந்த விசாரணையில், காயத்ரியின் குடும்பம் மற்றும் ராஜேஷிற்கும் காயத்ரியின் கள்ளக்காதல் பிரச்சனை காரணமாக அடிக்கடி பல தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் அவரது மைத்துனர் செல்வராஜ், ராஜேஷை மது அருந்த அழைத்து சென்று கொலை செய்திருக்கலாம் என்று காவல் துறையினர் சந்தேகித்துள்ளனர். செல்வராஜை கைது செய்த காவல் துறையினர், ராஜேஷின் மனைவி காயத்ரியிடமும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Pondichery murder case illegal affair police investigation


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->