கடலூரில் அலைமோதும் பாண்டிச்சேரி குடிமகன்கள்..!
Pondicherry Drinkers Went Cuddalore to Buy Liquor Alcohol 27 April 2021
புதுச்சேரி மாநிலத்தில் கொரோனா வைரஸ் பரவல் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், அம்மாநிலத்தில் ஊரடங்கு கடுமையாக்கப்பட்டு அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் புதுச்சேரி மக்களும் மீண்டும் ஊரடங்கை எதிர்கொள்ளும் சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
புதுச்சேரியில் உள்ள மதுபான கடைகள், சாராயக்கடைகள், கள்ளுக்கடைகள் நாளை முதல் ஏப்ரல் 30 ஆம் தேதி வரை மூடப்பட்டு இருக்க வேண்டும் என புதுச்சேரி மாநில அரசு நேற்று அறிவித்தது. இதனால் அம்மாநில குடிமகன்கள் செய்வதறியாது திகைத்தனர்.
இந்நிலையில், புதுச்சேரி மாநிலத்தில் உள்ள மதுபானக்கடைகள், கள்ளுக்கடைகள், சாராயக்கடைகள் போன்றவை மூடப்பட்டு உள்ளதால், புதுச்சேரி மாநில எல்லையில் இருக்கும் பகுதிகளில் உள்ள மதுபானக்கடைகளில் புதுச்சேரி மாநிலத்தை சார்ந்தவர்கள் அதிகளவு வந்து மதுபானத்தை வாங்கி சென்றனர்.
இதனால், புதுச்சேரி - தமிழ்நாடு எல்லையில் உள்ள கடலூரில் அமைந்துள்ள மதுபான கடைகளில் கூட்டம் குவிந்தது. அங்கு வந்த மதுபான பிரியர்கள், சமூக இடைவெளியுடன் நின்று மதுபானத்தை வாங்கி சென்றனர். விரைவில் தமிழகத்திலும் மதுபான கடைகள் மூடக்கூறி உத்தரவு வரலாம் என அரசுத்துறை வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கிறது.
Tamil online news Today News in Tamil
பொது எச்சரிக்கை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.
English Summary
Pondicherry Drinkers Went Cuddalore to Buy Liquor Alcohol 27 April 2021