பொள்ளாச்சி காவல் நிலையத்திற்கு மிரட்டல்.! தனிப்படை அமைப்பு விசாரணை.!
pollachi police station threat letter for petrol bomb
கோவை மாநகரில் உள்ள பாஜக அலுவலகத்தில் கடந்த 22 ஆம் தேதி பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் அப்பகுதியில், பரபரப்பை ஏற்படுத்தியது.
இதைத் தொடர்ந்து ஈரோடு, திருப்பூர் உள்ளிட்ட மாவட்டங்களில் இந்து முன்னணியினர் மற்றும் பாஜக நிர்வாகிகளின் கார், வீடு மற்றும் வர்த்தக நிறுவனங்கள் மீதும் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட செய்திகள் தொடர்ந்து வெளியாகி வந்துள்ள நிலையில், இதுதொடர்பாக போலீசார் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து பலரை கைது செய்து வருகின்றனர்.
இதையடுத்து, தற்போது "பொள்ளாச்சியில் 16 இடங்களில் பெட்ரோல் குண்டு வீசப்படும் என்று மேற்கு காவல் நிலையத்திற்கு மிரட்டல் கடிதம் ஒன்று வந்துள்ளது. இந்த செய்தி அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்தக் கடிதம் குறித்து மூன்று தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருவதாக பொள்ளாச்சி டிஎஸ்பி தீபா சுஜிதா தகவல் வெளியிட்டுள்ளார். ஏற்கனவே, பல்வேறு மாவட்டங்களில் பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்ட நிலையில் இந்த மிரட்டல் கடிதமானது மீண்டும் ஒரு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
pollachi police station threat letter for petrol bomb