இன்னும் 10 அமாவாசை .. அதுக்கு அப்புறம் அதிமுக ஆட்சி தான்... ஆரூடம் கூறும் பொள்ளாச்சி ஜெயராமன்..!
Pollachi Jayaraman Said AIADMK will form the government again within 10 months
அடுத்த 10 அமாவாசைக்குள் அதிமுக மீண்டும் ஆட்சி அமைக்கும் என செயல் வீரர்கள் கூட்டத்தில் பொள்ளாச்சி ஜெயராமன் பேச்சு.
கோவையில் அதிமுக செயல்வீரர்கள் கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் அதிமுகவின் முக்கிய நிர்வாகிகள் தொண்டர்கள் பலரும் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் அதிமுக தேர்தல் பிரிவு செயலாளரும், எம்.எல்.ஏவுமான பொள்ளாச்சி ஜெயராமன் பேசியதாவது,
திமுக அரசை கடுமையாக சாடிய அவர் ஆட்சிக்கு வந்து ஆறு மாதங்கள் ஆகியும் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என அவர் கூறினார். மேலும், அதிமுகவை விட்டு சென்றவர்கள் வெளியில் சென்றவர்கள் யாரும் வரலாற்றில் நிலைத்தில்லை என தெரிவித்தார்.
மேலும், அடுத்த 10 அமாவசைக்குள் அதிமுக மீண்டும் அரியணை ஏறும் என்றும் தெரிவித்தார். எஸ். பி வேலுமணிக்கு உறுதுணையாக இருப்போம் எனவும் தெரிவித்தார்.
English Summary
Pollachi Jayaraman Said AIADMK will form the government again within 10 months