தமிழகத்தையே உலுக்கிய பொள்ளாச்சி சம்பவம்! விசாரணையில் புதிய திருப்பம்!
Pollachi case another 3 person arrested by CBI
கோயம்புத்தூர் மாவட்டம் பொள்ளாச்சியில் இளம்பெண்களை ஏமாற்றி அவர்களை பாலியல் சித்திரவதைகளுக்கு உள்ளாக்கி, அதனை வீடியோவாக எடுத்து இளைஞர்கள் பணம் பறித்து மிரட்டிய சம்பவம், தமிழகத்தில் மிகப்பெரிய அதிர்வலையை ஏற்படுத்தியது.
2019ஆம் ஆண்டுஇது தொடர்பான செய்திகள் வெளியாகிய நிலையில், இந்த விவகாரத்தில் சபரிராஜன், திருநாவுக்கரசு, சதீஷ், வசந்தகுமார் உள்ளிட்ட 4 இளைஞர்கள் கைது செய்யப்பட்டனர். பின்னர் புகார் கொடுத்த இளம்பெண்ணின் சகோதரர் அடுத்த சில நாட்களில் தாக்கப்பட்டார். தாக்குதல் சம்பவத்தில் தொடர்புடைய மணிவண்ணனுக்கும் பாலியல் குற்றத்தில் தொடர்பிருப்பது விசாரணையில் தெரியவந்தது. இவர்கள் 5 பேரும் தற்போது சேலம் சிறையில் இருந்து வருகின்றனர்.
இந்த வழக்கானது, சிபிசிஐடி இடம் இருந்து சிபிக்கு மாற்றப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் புதிய திருப்பமாக இந்த வழக்கில் சம்பந்தப்பட்டவர்கள் என அருளாணந்தம், ஹேரேன்பால், பாபு ஆகியோர் கைது செய்யப்பட்டு உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
மூவரையும் கைது செய்ய சிபிஐ தனி இடத்தில் வைத்து விசாரணை செய்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. நீண்ட நாட்களுக்கு பிறகு இந்த விவகாரத்தில் மேலும் 3 பேரை கைது செய்து இருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
Pollachi case another 3 person arrested by CBI