டம்ளர் திருடிய காவலர்!! உயரதிகாரிகள் எடுத்த அதிரடி முடிவு!! தலையில் அடித்துக்கொண்ட பொதுமக்கள்!! - Seithipunal
Seithipunal


புதுக்கோட்டை, மேற்பனைக்காடு பகுதி இளைஞர்கள் கோடை காலத்தில் பொது மக்களின் தாகம் தணிப்பதற்காக தண்ணீர் பந்தல் அமைத்து இருந்தனர். இந்த பந்தலில் பானையில் தண்ணீரும் தம்ளரும் வைத்துள்ளனர்.

ஆனால், அங்கு வைக்கப்பட்டிருந்த டம்ளர்கள் அடிக்கடி களவு போயின. இதனால், இந்த டம்ளர்களை திருடுவது யார் என்று அறிய பொதுமக்கள் சார்பில் அமைக்கப்பட்டிருந்த சிசிடிவி கேமராவை ஆராய்ச்சி செய்தனர். அப்போது அவர்களுக்கு ஒரு அதிர்ச்சியான காட்சி காண கிடைத்தது.

ஊர்க்காவல்படை வீரர் வடிவழகன் என்பவரும், கீரமங்கலம் காவல் நிலையத்தில் காவலராக பணியாற்றி வரும் ஐயப்பன் என்பவரும் இந்த டம்ளர்களை திருடும் காட்சி பதிவாகியிருந்தது. இதனை கண்ட பொது மக்களும், இளைஞர்களும் மிகுந்த அதிர்ச்சிக்கு உள்ளாகினர்.

அந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. இதனை பார்த்த காவல்துறை உயரதிகாரிகளும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதனால் திருடிய போலீஸ்காரர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் சார்பில் வலியுறுத்தப்பட்டது.

இந்நிலையில் அவரை ஆயுதப்படைக்கு இடமாற்றம் செய்துள்ளனர். மேலும், ஊர்க்காவல் படை வீரரான வடிவழகனிடம் போலீசார் விசாரணை நடத்தி கொண்டுள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

police theft water glass in pudukottai


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->