நடுரோட்டில் 8 பேர் கொண்ட கும்பல்., தெறித்தோடிய இளைஞர்.. இறுதியில் சோகம்..! விசாரணையில் பகீர் தகவல்.!
police son murder in madurai
தமிழகத்தில் மதுரை மாவட்டத்தில் உள்ள கோ.புதூர் விஸ்வநாதநகரை சேர்ந்தவர் பூமிநாதன் என்பவர். இவர் போலீஸ்காரர் ஆவார், இவர் சமீபத்தில் உயிரிழந்துவிட்டார். இதை தொடர்ந்து, வாரிசு அடிப்படையில் அவரது மனைவி வெங்கடேஸ்வரிக்கு, மதுரை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் கிளர்க் வேலை கொடுக்கப்பட்டது.
இந்த நிலையில், இவரது மகன் கோபால்சாமி, இவரை வெள்ளிக்கிழமை அன்று இரவு தல்லாகுளம் அருகே, 8 பேர் கொண்ட கும்பல் நடுரோட்டில் ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை செய்தனர். இது குறித்து, தல்லாகுளம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
இந்த வழக்கின் முதல்கட்ட விசாரணையின் அடிப்படையில், கோபால்சாமி, அவரது நண்பர் ஒருவருக்கு, சில நாள் முன்பாக, காதல் திருமணம் செய்து வைத்திருக்கிறார். தவிர அந்த பகுதியில் நடக்கும் வாகன திருட்டு சம்பவங்கள் குறித்து போலீசாருக்கு துப்பு கொடுத்து வந்திருக்கிறார்.
இதனால் முன்விரோதம் கொண்டவர்கள், கோபால்சாமியை கொலை செய்திருக்கலாம் என்னும் சந்தேகத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்.
English Summary
police son murder in madurai