தமிழகத்தை உலுக்கிய பதறவைக்கும் சம்பவம்.! அதிரடியாக வேட்டையாடிய போலீஸ்.!
police shoot in perampalur
மங்களமேடு போலீசார் பெரம்பலூர் மாவட்டத்திதில் உள்ள மங்களமேடு அருகே அமைந்துள்ள திருமாந்துறை சுங்கச்சாவடி பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்துள்ளனர். அப்பொழுது, அந்த வழியே வந்த காரை மறியல் செய்து சோதனை மேற்கொள்ள முயற்சி செய்துள்ளனர்.
அப்போது, டிரைவர், காரை நிறுத்தாமல் போலீசாரை கடந்து சென்றுள்ளார். இதனால் எதோ வில்லங்கம் இருப்பதை உணர்ந்து, அதிர்ச்சி அடைந்த போலீசார் தங்களது வாகனங்களை உடனடியாக எடுத்து அந்த காரை பின்தொடர்ந்து சென்றனர். போலீசார் பின்தொடர்வதை உணர்ந்த வாகன ஓட்டி இன்னும் வேகத்தை கூட்ட பின்னால் தொடர்ந்து வந்த போலீசார் எதிர்பாராத நேரத்தில் காரின் டயரைக் பார்த்து துப்பாக்கியால் சுட்டுள்ளனர்.
இதனால் கார் நிலை தடுமாறி தாறுமாறாக ஓடியது. பின்னர் காரில் வந்த கும்பல் அங்கிருந்து தப்பி செல்ல முயற்சிக்கவே தொடர்ந்து வந்த போலீசார் கும்பலை மடக்கி பிடித்தனர். பின்னர் காரில் சோதனையிட்டபோது, காரினுள் ஒரு சாக்கு பைகளில் கஞ்சா பொட்டலங்கள், துப்பாக்கிகள் உள்ளிட்டவை இருந்ததை பறிமுதல் செய்தனர். 180 கிலோ கஞ்சா பொட்டலங்கள் வழங்குதல் செய்யப்பட்டதாக தகவல் அளித்துள்ளனர்.
போலீசார் அவர்களிடம் விசாரணை மேற்கொண்ட பொழுது. மதுரையை சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்துள்ளது. அவர்கள் எங்கிருந்து கஞ்சாவை கடத்தி வந்துள்ளனர். எங்கு கொண்டு செல்ல முயன்றனர்? என்பது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சினிமாவை மிஞ்சும் வகையில் நடந்த, இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்பட்டுள்ளது.
English Summary
police shoot in perampalur