திமுக பிரமுகருக்கு சொந்தமான பங்களாவில் கட்டுக்கட்டாக பணம் பறிமுதல்.!
police search in dmk member house
கோவை வடவள்ளி லட்சுமி நகர் பகுதியை சேர்ந்தவர் திமுக பிரமுகர் ஆனந்தன், இவருக்கு சொந்தமான பங்களாவை, ஷேக், ரஷீத் ஆகிய இருவர் வாடகைக்கு எடுத்து வசித்து வந்தனர்.
ஷேக், ரஷீத் உள்ளிட்ட இருவரின் நடவடிக்கையில் சந்தேகம் இருப்பதாக கோவை போலீசாருக்கு வந்த ரகசிய தகவலின் பேரில் பேரூர் டி.எஸ்.பி. வேல்முருகன் தலைமையில் போலீசார் அங்கு சென்றபோது இருவரும் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.
இதையடுத்து திமுக பிரமுகர் ஆனந்தனுக்கு சொந்தமான பங்களாவில் போலீசார் சோதனையிட்டதில் அங்குள்ள அறைகளில், செல்லாத பழைய 500, மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் 268 கட்டுகள் பதுக்கி வைத்திருந்தது கண்டுபிடித்து அவை அனைத்தும் அங்கிருந்து பறிமுதல் செய்யப்பட்டது.
கைப்பற்றப்பட்ட 268 கட்டுககளை பிரித்து பார்த்த போது அதில் மேலேயும், அடியிலும் மட்டும் ரூபாய் நோட்டுகளும், இடையே வெள்ளைத்தாளும் இருப்பது தெரியவந்தது. இந்த ரூபாய் நோட்டுகளின் மதிப்பு ரூபாய் 2 லட்சத்து 68 ஆயிரம் இருக்கும் என்று கூறப்படுகிறது.
தப்பியோடிய ஷேக், ரஷீத் ஆகிய இருவரும் எந்த ஊரைச்சேர்ந்தவர்கள், செல்லாத நோட்டுகளை எதற்காக பதுக்கி வைத்தனர், இரட்டிப்பு பண மோசடி கும்பலைச் சேர்ந்தவர்களா? என போலீசார் விசாரித்து வருகிறார்கள். இதேற்கிடையே ஷேக், ரஷீத்துக்கு வீடு கொடுத்த வீட்டின் உரிமையாளரும் திமுக பிரமுகருமான அனந்தனுக்கும் இந்த சம்பவத்தில் தொடர்பு உள்ளதா என போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
English Summary
police search in dmk member house