பெண்ணிடம் ஆபாசமாக பேசிய போலீஸ்காரர்..! குடிபோதையில் செய்த லீலை.!
police misbehave to women
கோவையில் பெரியநாயக்கன் பாளையத்தில் வசித்து வருபவர் ரவிக்குமார். இவரது மனைவி சரண்யா. சரண்யா கீரணத்தத்தில் உள்ள தனது தாயாரை பார்ப்பதற்காக இருசக்கர வாகனத்தில் தனியாக சென்றிருக்கிறார்.
அப்போது, அத்திப்பாளையம் அடுத்துள்ள டாஸ்மாக் கடையை தாண்டி சென்று கொண்டிருந்த போது போலீஸ்காரர் ஒருவர் சீருடையில் அவரை துரத்தி கொண்டு வந்துள்ளார்.
இதை கண்டு பயந்து போன சரண்யா தனது வாகனத்தை வேகமாக ஓட்டியுள்ளார். அப்போது அந்த பெண்ணை வழிமறித்த போலீஸ்காரர் ஏய் நீ அழகாக இருக்கிறாய்... உங்கள் கண்கள் அழகாக இருக்கிறது என்று மோசமான வார்த்தைகளில் பேசி உள்ளார்.
ஆனால் அவர் மேலும் சரண்யாவை பின் தொடர்ந்து வந்துள்ளார். இதனால் பயந்து போன சரண்யா அத்திப்பாளையம் பகுதியில் உள்ள பேன்சி ஸ்டோரில் தஞ்சம் அடைந்திருக்கிறார்.
தொடர்ந்து சென்ற போலீஸ்காரர், சரண்யாவிடம் தகாத வார்த்தையில் பேசி இருக்கிறார். இது தொடர்பாக சரண்யா தனது கணவர் ரவிக்குமாருக்கு செல்போன் மூலம் தகவல் கொடுத்தார்.
இதை தொடர்ந்து பெரியநாயக்கன் பாளையத்தில் இருந்து சரண்யாவின் கணவர் ரவிக்குமார் மற்றும் அவரது நண்பர்கள் அத்திப்பாளையம் பகுதிக்கு வந்தார்கள்.
அவர்கள் போலீஸ்காரரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அந்த பகுதி பொதுமக்களும் அங்கு திரண்டு வந்து வாக்குவாதம் செய்தார்கள். அப்போது போலீஸ்காரர் குடிபோதையில் இருந்தது தெரிய வந்தது. அவரது பைக்கை சோதனை செய்த போது அதில் மதுபாட்டில்கள் இருந்திருக்கிறது.
இதனால் ஆவேசம் அடைந்த பொதுமக்கள் சீருடையில் இருந்ததால் அடிக்காமல் விடுகிறோம் என கூறி போலீஸ்காரரை கோவில் பாளையம் போலீசில் ஒப்படைத்தனர்.
விசாரணையில் பெண்ணிடம் ஆபாசமாக பேசிய போலீஸ்காரர் பெயர் பிரபாகரன் என்பதும், பெரியநாயக்கன் பாளையம் போலீஸ் அதிகாரி ஒருவரின் கார் டிரைவர் என்பது தெரிய வந்தது.
இது குறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுஜித் குமாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர் குடிபோதையில் பெண்ணை ஆபாசமாக பேசிய போலீஸ்காரர் பிரபாகரனை சஸ்பெண்டு செய்து உத்தரவிட்டார். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
English Summary
police misbehave to women