#கோயம்புத்தூர் || திருமணத்தில் விருப்பம் இல்லாத்தால் காவலர் எடுத்த விபரீத முடிவு..! - Seithipunal
Seithipunal


காவலர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கோயம்புத்தூர் மாவட்டம், பருத்தியூரை சேர்ந்தவர் திருமூர்த்தி. இவரது மகன் மணியரசு காவலராக பணியாற்றி வருகிறார்.இவருக்கு  கடந்த மாதம் திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்தது. திடீரென அவர் அந்த திருமணத்தில் விருப்பம் இல்லை என கூறியுள்ளார். வீட்டில் உள்ளவர்கள் அவரை சமாதானம் செய்து அவரை திருமணத்திற்கு ஒப்பு கொள்ள வைத்துள்ளனர். 

இதனை அடுத்து, இரவு பணிக்கு சென்று விட்டு வந்து சொல்வதாக கூறி விட்டு சென்றார். இன்று காலை அவரை செல்பேசியில் தொடர்பு கொள்ள முயற்சித்தனர். நீண்ட நேரமாகியும் அவர் அழைப்பை எடுக்காததால் அதிர்ச்சியடைந்த அவர்கள் காவல்நிலையத்திற்கு அவரை தேடி சென்றனர். ஆனால், அங்கு அவர் இல்லாததால் அருகில் இருந்த காவலர் குடியிருப்புக்கு சென்றனர்.

அங்கு வீட்டின் கதவு உள்புறமாக தாழிடப்பட்டு இருந்தது. இதனை அடுத்து, கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது அவர் தூக்கில் தொங்குவதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். அவரின் உடலை மீட்ட காவல்துறையினர் பிரேதபரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்த காவல்துறையினர் விசாரணைமேற்கொண்டு வருகின்றனர்.

முதற்கட்ட விசாரணையில் அவருக்கு வேறோரு பெண்ணுடன் பழக்கம் இருந்தது. . ஆனால், பெற்றோர் பார்த்த பெண்ணை திருமணம் செய்வதற்கு அவர் சம்மதம் தெரிவித்து உள்ளார். இதற்கிடையில்  திருமணத்தில் விருப்பமில்லை என பெற்றொரிடம் கூறியுள்ளார். அதற்கு பெற்றோர் உன் விருப்பத்தின் பேரில் தான் அந்த பெண்ணுடன் திருமணம் நிச்சயிக்கப்பட்டு அதனால், அந்த பெண்ணை திருமணம் செய்ய வேண்டும் என தெரிவித்துள்ளனர். இதனால், அவர் தற்கொலை செய்து கொண்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Police Man Committed Suicide In Coimbatore


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->