#கோயம்புத்தூர் || ஆன்லைன் ரம்மியால் தற்கொலைக்கு முயன்ற ஆயுதபடை காவலர்..!
Police man attempt suicide in Coimbatore
துப்பாக்கியால் ஆயுதபடை காவலர் சுட்டு தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.
கோயம்புத்தூர் ஆயுதபடை காவலராக பணியாற்றி வருபவர் காளிமுத்து. கோவை அருங்காட்சியகத்தில் பணியில் இருந்த அவர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை முயற்சியில் ஈடுப்பட்டார். அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.
முதற்கட்ட விசாரணையில் அவர் ஆன்லைன் ரம்மி விளையாடி வந்ததாக தெரிகிறது. கடன் வாங்கி ஆன்லைன் ரம்மி விளையாண்டதாகவும் கடனை திரும்ப செலுத்த முடியாமல் அவதிப்பட்டு வந்துள்ளார். இதனால், விரக்தியில் அவர் தற்கொலைக்கு முயன்றார் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து காவல்துறையினர் தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ஆன்லைன் ரம்மியால் தற்கொலை முயற்சி சம்பவம் அதிகரித்து வருவதால் அரசு அதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுகொண்டுள்ளனர்.
English Summary
Police man attempt suicide in Coimbatore