திடீரென வயிற்று வலி... 10ஆம் வகுப்பு மாணவிக்கு பிறந்த பெண் குழந்தை... பிளஸ்-2 மாணவனுக்கு வலைவீச்சு...! - Seithipunal
Seithipunal


விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவர் 15 வயதுடைய சிறுமி. பத்தாம் வகுப்பு படித்து வந்த இவர் தற்பொழுது தேர்வு முடிந்து விடுமுறையில் வீட்டில் இருந்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த சில நாட்களாக சிறுமியின் வயிற்றில் மாற்றம் ஏற்பட்ட நிலையில் திடீரென சிறுமிக்கு வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. இதனால் பெற்றோர் சிறுமியை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.

ஆனால் அங்கு பரிசோதனை செய்த மருத்துவர் சிறுமி நிறை மாத கர்ப்பிணியாக இருப்பதாக தெரிவித்துள்ளார். மேலும் இன்னும் சில மணி நேரத்தில் குழந்தை பிறந்து விடும் என்றும் தெரிவித்துள்ளார். இதைக்கேட்ட சிறுமியின் பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர். இதைத்தொடர்ந்து சிறுமிக்கு பெண் குழந்தை பிறந்தது.

இந்நிலையில் சிறுமியின் பெற்றோர் இது குறித்து விசாரித்ததில், அதே பகுதியை சேர்ந்த 12ஆம் வகுப்பு படித்து வந்த சிறுவன் ஆசை வார்த்தைகள் கூறி பலாத்காரம் செய்தது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து சிறுமியின் பெற்றோர் இதுகுறித்து விழுப்புரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். இந்த புகாரின் அடிப்படையில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்த போலீசார் சிறுவனை தீவிரமாக தேடி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

police looking for 12 th class boy due to Girl born to 10th class girl in Villupuram


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->