இன்ஸ்டாகிராம் நண்பருக்காக வீட்டை விட்டு சென்ற 3 சிறுமிகள்... திருச்சி விரைந்த போலீசார்...! - Seithipunal
Seithipunal


இன்ஸ்டாகிராம் நண்பரை சந்திக்க வீட்டுக்கு தெரியாமல் சென்னையிலிருந்து மூன்று 9ஆம் வகுப்பு மாணவிகள் திருச்சி சென்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

சென்னையில் ஒன்பதாம் வகுப்பு மாணவிகள் மூன்று பேர் கோவிலுக்கு செல்வதாக பெற்றோரிடம் கூறிவிட்டு சென்றுள்ளனர். ஆனால் வெகு நேரமாகியும் மூன்று பேரும் திரும்பி வராததால் அதிர்ச்சியடைந்த பெற்றோர்கள் இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். இந்நிலையில் இதுகுறித்து விசாரணை நடத்தியதில், இன்ஸ்டாகிராம் மூலம் பழகிய நண்பரை சந்திப்பதற்காக பெற்றோருக்கு தெரியாமல் மூன்று மாணவிகளும் சென்னையில் இருந்து திருச்சி சென்றது தெரியவந்தது.

இதைத்தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார், மூன்று மாணவிகளை மீட்பதற்காக திருச்சி விரைந்துள்ளனர். மேலும் இந்த சம்பவம் பேரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Police investigation for 3 girls left home and went to Trichy for Instagram friend


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->