விஷம் கலந்த குளிர்பானத்தை குடித்ததால் பேத்தி பலி.. பாட்டிக்கு தீவிர சிகிச்சை.. காவல்துறை தீவிர விசாரணை..! - Seithipunal
Seithipunal


வீட்டின் முன் கிடந்த குளிர்பானத்தை குடித்த 3 வயது சிறுமி உயிரிழந்த நிலையில் குழந்தையின் பாட்டிற்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

கள்ளக்குறிச்சி மாவட்டம் மல்லாபுரம் கிராமத்தை சேர்ந்த சத்யராஜ். இவரது தாய் லட்சுமியும் மகள் அர்ச்சனாவும் தங்கள் வீட்டிற்கு எதிரே கிடந்த குளிர்பானத்தை எடுத்து வந்து கடந்த 4 நாட்களுக்கு முன் குடித்து ள்ளனர்.

 இதில் அவர்களுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதனால் கள்ளக்குறிச்சி தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். சிறுமியின் உடல்நிலை மோசமானது எடுத்து அவர் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

ஆனால், அழைத்துச் செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார். பாட்டி லட்சுமி சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.அவர்கள் குடித்த குளிர்பானத்தில் விஷம் இருந்ததாக மருத்துவர்கள் தெரிவித்ததையடுத்து,

அந்த விஷம் கலந்த குளிர்பானத்தை அவர்கள் வீட்டில் அருகே வீசி செய்தது யார் என்பது குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Police Investigation about Young Girl Dead Near Kallakurichi


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->