12ம் வகுப்பு மாணவன் சாவில் சந்தேகம் இருப்பதாக பெற்றோர் புகார்..!
Police investigation about 12th student death
பன்னிரண்டாம் வகுப்பு மாணவன் சாவில் சந்தேகம் இருப்பதாக உறவினர்கள் சாலைமறியலில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம் பூங்குடிகிராமத்தை சேர்ந்தவர் குணாளன். இவர் அங்குள்ள பள்ளி ஒன்றில் 12ம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் கடந்த 13ஆம் தேதி இரு சக்கர வாகனத்தில் சென்றபோது விபத்தில் அவர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது.
அவரது பெற்றோர் மகனின் சாவில் சந்தேகம் இருப்பதாக கூறி உறவினர்களுடன் திருச்சி புதுக்கோட்டை தேசிய நெடுஞ்சாலையில் போராட்டம் நடத்தினர். இதுகுறித்து தகவல் அறிந்து வந்த வட்டாட்சியர் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்.
அப்பொழுது மாணவன் சாவில் சந்தேகம் இருப்பதாகவும் உரிய விசாரணை நடத்த வேண்டும் எனவும் அவர்கள் கேட்டுக்கொண்டனர். காவல்துறையினர் மற்றும் வட்டாட்சியர் உறுதி அளித்ததை அடுத்து அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சாலை மறியலால் அப்பகுதியில் சில மணி நேரங்கள் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
English Summary
Police investigation about 12th student death