கோவை || குளத்தில் மிதந்த ஆண் சடலம்.! போலீசார் விசாரணை.! - Seithipunal
Seithipunal


கோவை மாவட்டத்தில் குளத்தில் மிதந்த ஆண் சடலம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கோவை மாவட்டம் ஆர்.எஸ்.புரம் தடாகம் சாலையில் உள்ள முத்தண்ணன் குளத்தில் 55 வயது மதிக்கதக்க ஆண் சடலம் ஒன்று மிதந்துள்ளது. இதைப்பார்த்து  அதிர்ச்சடைந்த நிலையில், அப்பகுதியை சேர்ந்தவர்கள் இது குறித்து காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

இந்த தகவலையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ஆர்.எஸ்.புரம் போலீசார், சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதையடுத்து இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார், உயிரிழந்தவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? குளத்தில் தவறி விழுந்தாரா? அல்லது யாராவது கொலை செய்து குளத்தில் போட்டார்களா? என்று பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Police investigating the body of a man floating in the pond in kovai


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->