தற்கொலைக்கு முயன்ற இளைஞருக்கு 'பணம்' கொடுத்து உதவிய போலீசார்!!
police helps to poor student who attempt suicide
ராமநாதபுரம் மாவட்டத்தில் வசித்து வருபவர் சரவணன் இவருக்கு வயது 22. இவர் சென்னையில் தங்கி லயோலா கல்லூரியில் படித்து வந்துள்ளார். இந்த நிலையில், குடும்பத்தின் வறுமை காரணமாகவும் தேர்வு கட்டணம் செலுத்த முடியாத வேதனையினாலும் தற்கொலைக்கு முயற்சித்துள்ளார்.
அவரை மீட்ட சக நண்பர்கள், போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர். பின்னர் சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் சரவணனை மீட்டு அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும் அவர் தங்கியிருந்த அறைக்கு நலமுடன் திரும்பினார்.
அதன் பின்னர் தற்கொலைக்கு முயற்சித்த காரணத்தை குறித்து அவரிடம் விசாரித்த போலீசார், அவரது நிலைமையை புரிந்து கொண்டு அவரது சொந்தப் பணமான 4000 ரூபாயை தேர்வுக் கட்டண தொகைகாக கொடுத்து உதவியுள்ளார்.
வறுமையில் தற்கொலை செய்து கொள்ளும் மனநிலைக்கு சென்ற மாணவனுக்கு தனது சொந்தப் பணத்தை கொடுத்த காவல் உதவி ஆய்வாளருக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன. மேலும் சென்னை மாநகர காவல் ஆணையர் ஏ.கே விஸ்வநாதன், உதவி ஆய்வாளர் மாதேஸ்வரனை அழைத்து அவரது வாழ்த்துக்களையும், பாராட்டுகளையும் தெரிவித்து உள்ளார்.
English Summary
police helps to poor student who attempt suicide