காதலிக்க மறுத்த +2 மாணவி மீது தாக்குதல்.. நாடகக்காதலன் நடுரோட்டில் வெறிச்செயல்.. பரபரப்பு சம்பவம்.!
Police have arrested a youth who attacked a student
காதலிக்க மறுத்த மாணவி மீது தாக்குதல் நடத்திய இளைஞரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
கன்னியாகுமரி மாவட்டம், வெள்ளாடிச்சிவிளையை பகுதியை சேர்ந்த 17 வயது மாணவி, அந்த பகுதியில் உள்ள பள்ளி ஒன்றில் 12 வகுப்பு படித்து வருகிறார். அவரை காதலிப்பதாக கூறி சந்துரு(21) என்ற வாலிபர் தொல்லை செய்து வந்துள்ளார்.
தினம் அந்த மாணவியை பின் தொடர்ந்து அவரை காதலிக்க சொல்லி வற்புறுத்தியுள்ளான். ஆனால் அந்த மாணவி அவனின் காதலை ஏற்கொள்ளவில்லை. இது குறித்து தனது வீட்டிற்கும் தெரிவிக்காமல் இருந்துள்ளார்.
இந்நிலையில், வழக்கம் போல மாணவி பள்ளி முடித்து வீட்டிற்கு வந்துள்ளார். அவர் தனியே வருவதை அறிந்த சந்துரு அந்த மாணவியை வழிமறித்து அவரை தன்னை காதலிக்குமாறு வற்புறுத்தியுள்ளார்.
இதற்கும் அந்த மாணவி மறுத்து தனது முடிவில் உறுதியாக இருந்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அவன் அந்த மாணவியை தாக்கியுள்ளான். அப்போது அந்த மாணவி சத்தம் போடவே அருகில் இருந்தவர்கள் வந்துள்ளனர். இதனால் அவன் அங்கிருந்து தப்பியோடியுள்ளான்.
இதனை அடுத்து வீட்டிற்கு வந்த மாணவி நடந்த சம்பவம் குறித்து பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். அவர்கள் இது குறித்து காவல்நிலையத்தில் புகார் அளித்தனர்.
இந்த புகாரை அடுத்து சந்துரு மீது வழக்குபதிவு செய்து அவனை கைது செய்தனர்.
English Summary
Police have arrested a youth who attacked a student