13 வயது சிறுமி மர்ம மரணம்., வெளியான திடுக்கிடும் தகவல்கள்..!! மயிலாடுதுறையில் பரபரப்பு..!!
Police have arrested a teenager who killed a 13-year-old girl
மயிலாடுதுறை அருகே சிறுமி மர்மமாக உயிரிழந்த வழக்கில் அந்த சிறுமியின் காதலனே குற்றவாளி என தெரியவந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மயிலாடுதுறை மாவட்டம், வில்லியநல்லூர் பகுதியை சேர்ந்த ஆனந்தன் என்பவரின் மகள் ஷோபனா (13). இவர் கடந்த 7 தேதி அன்று அந்த பகுதியில் இருக்கும் தனது மாமா வீட்டிற்கு சென்றுள்ளார். நீண்ட நேரமாகியும் அவர் வராததால் அவரை தேடியுள்ளனர். சிறுமியை காணவில்லை என்பதால் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
இந்நிலையில், அந்த சிறுமி அவரின் மாமா வீட்டிற்கு அருகில் உள்ள வாய்காலில் மர்மமான முறையில் இறந்து கிடந்துள்ளார். இதனை அடுத்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் அவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
இந்நிலையில், இதுகுறித்து வழக்குபதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வந்தனர். இதில் அந்த பகுதியில் வசித்து வந்த பிரபாகரன் என்பவர் மீது காவல்துறைக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. அவரை விசாரித்த காவல்துறையினருக்கு பல திடுக்கிடும் தகவல்கள் கிடைத்தன.
பிரபாகரனும் அந்த சிறுமியும் கடந்த 3 மாதங்களாக காதலித்து வந்துள்ளனர். இதனால் அந்த சிறுமியிடம் ஆசை வார்த்தை கூறி பலமுறை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். சம்பவத்தன்று அதே போல சிறுமியை வரவழைத்து பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.
அதன் பின் அந்த பெண்ணை அந்த பகுதி இளைஞர்களுடன் பேச வேண்டாம் என கூறியுள்ளார். அப்போது ஏற்பட்ட வாக்குவாதத்தில் தனது வேட்டியால் சிறுமியின் கழுத்தை நெறித்துள்ளார். இதில் சிறுமி மயக்கமடையவே அருகில் உள்ள வாய்காலில் தூக்கி போட்டுள்ளார்.
அப்போது அந்த சிறுமி வாய்க்காலில் கிடந்த நீரால் மூச்சுமுட்டி உயிரிழந்துள்ளார். பின்னர் அந்த சிறுமியை காணவில்லை என குடும்பத்தினர் தேடும் போது, பிரபாகரனும் தேடுவது போல நடித்துள்ளார். அவர் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் பிரபாகரனை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
Police have arrested a teenager who killed a 13-year-old girl