லஞ்சம் வாங்கிய காவல்துறை ஆய்வாளர்!! தப்ப முயன்றதில், அப்பாவி கூலித்தொழிலாளி பலி!! - Seithipunal
Seithipunal


பண்ணாரி மற்றும் திம்பம் வழியாக கர்நாடகா செல்லும் லாரிகளை பரிசோதனை செய்கிறேன் பேர்வழி டிரைவர்களை மிரட்டி அவர்களிடம் இருந்து லஞ்சம் வாங்குவதாக ஈரோடு சத்யமங்கலத்தை சேர்ந்த போக்குவரத்து காவல்துறை அதிகாரி ஒருவர் மீது பல்வேறு புகார்கள் வந்தவண்ணம் இருந்துள்ளது.

இதனால், நேற்று போக்குவரத்து காவல் துறை அதிகாரி பதி தனது சொந்த காரில் சென்று வாகன பரிசோதனை மேற்கொண்டுள்ளார். அப்போது, லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் மாறுவேடத்தில் சென்று அவரை பிடிக்க திட்டமிட்டு அவரை நெருங்கியுள்ளனர். ஆனால், போக்குவரத்துக்கு காவல்துறை அதிகாரி தனது சொந்த காரிலேயே வருவதாக கூறியுள்ளார். அதிகாரிகளும் நம்பி முன் சென்றனர்.

லாரி முன்னால் செல்ல பதியின் கார் அவர்களின் பின்புறம் பதி வந்துள்ளார். ஆனால்,கெஞ்சணுர் சாலை அருகே வந்ததும் தனது காரை திருப்பிய பதி விரைவாக செல்ல இதனை பார்த்த லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரிகளும் விரைந்தனர். ஆனால், அவரை பிடிக்க முடியவில்லை. மிகவேகமாக சென்றதால், பதியின் கார் ஒரு மோட்டார்சைக்கிளில் மோதியது. இதனால் அந்த மோட்டார்சைக்கிளில் சென்ற புஞ்சைபுளியம்பட்டியை சேர்ந்த வேலுச்சாமி படுகாயம் அடைந்துள்ளார்.

ஆனால், பதியை பிடிக்கமுடியவில்லை. இதை தொடர்ந்து ஈரோடு காவல் நிலையத்தில் லஞ்சம் வாங்கியதற்காகவும், சத்தியமங்கலம் காவல் நிலையத்தில் விபத்து ஏற்படுத்தியதாகவும் அவர் மீது வழக்கு தொடுத்துள்ளனர். மேலும், காரில் தப்பி ஓடிய பதியை தேடி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

police got case for bribery and accident


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->